டெல்லி

பொதுத்துறை நிறுவனமான கனரா வங்கி இனி மினிமம் பேலன்ஸ் அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது

கனரா வங்கியின் நகர கிளைகளில் ரூ. 2,000, சிறுநகர கிளைகளில் ரூ.1,000 மற்றும் கிராம கிளைகளில் ரூ.500 என்ற குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியிருந்தது. இவ்வாறு குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க இல்லையெனில் ரூ.25 முதல் ரூ.45 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது பொதுத்துறை வங்கியான கனரா, சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கி அதன்படி சேமிப்புப் கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை கனரா வங்கி ரத்து செய்துள்ளது

இந்த அபராத ரத்து இன்று (ஜூன் 1) முதல் நடைமுறைக்கு வருவதாக கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.