ட்டோவா

ந்தியாவுடனான உறவில் விரிசல் காரணமாகக் கனடா அமைச்சரின் இந்தியப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் டில்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்கக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் வந்திருந்தார். ஆயினும், அவர் 10ம் தேதி நடந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவில்லை.

ஜி20 உச்சி மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ட்ரூடோ இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது., கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கனடாவில் உள்ள இந்து மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல்கள் வருவதாகவும்

கனடா அரசு இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ட்ரூடோவிடம் மோடி வலியுறுத்தியதாகவும் காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியது.

ஜி20 மாநாட்டை நிறைவு செய்த பின் பிற நாடுகளின் தலைவர்கள் சொந்த நாடு சென்ற நிலையில் விமான கோளாறு காரணமாக ட்ரூடோ கனடா செல்வதில் கால தாமதம் ஏற்பட்டது. அவர் திட்டமிட்ட காலத்தைக் கடந்து 2 நாட்கள் கழித்து இந்தியாவில் இருந்து புறப்பட்டார். இந்தியா – கனடா இடையேயான உறவில் இதனால் விரிசல் அதிகரித்து வந்தது.

கனடா வர்த்தக்கத்துறை அமைச்சரின் இந்திய வருகை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இரு நாட்டிற்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்தக் கனடா வர்த்தகத்துறை அமைச்சர் மெரி நக் இந்தியா வர திட்டமிட்டிருந்தார்.

ஜி20 மாநாட்டின் போது கனடா பிரதமர் ட்ரூடோ இந்தியாவால் புறக்கணிக்கப்பட்டதையடுத்து கனடா வர்த்தகத்துறை அமைச்சர் மெரியின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மெரியின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தைக் கனடா அரசு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.