டெல்லி: விவசாயிகள் நலனை மேம்படுத்தும் வகையில் ரூ.14,000 கோடியில் 7 முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 28,602 கோடி மதிப்பிலான 10 மாநிலங்களில் 12 தொழில்துறை ஸ்மார்ட் சிட்டிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, விவசாய ஆராய்ச்சி, கால்நடை மேலாண்மை, தோட்டக்கலை, மண் சுகாதார மேலாண்மை மற்றும் கிருஷி விக்யான் கேந்திராக்கள் (KVKs) மூலம் விவசாய விரிவாக்கம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வருவாயை பெருக்கவும், மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டத்தில்  7 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நலனை மேம்படுத்தும் வகையில் ரூ.14,000 கோடியில் 7 முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

அத்துடன், 28,602 கோடி மதிப்பிலான 10 மாநிலங்களில் 12 தொழில்துறை ஸ்மார்ட் சிட்டிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட ஒரு வாரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தொழில்நுட்பத்துடன் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். டிஏஎம் திட்டத்தின் முக்கிய அம்சமாக, வேளாண் ஆவணங்கள், கிராமப்புற நிலங்களுக்கான வரைபட ஆவணங்கள், பயிர் விளைவித்திருப்பது குறித்த ஆவணங்கள் ஆகியவற்றை பராமரித்தல் ஆகியவை இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உணவுக்கான பயிர் அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்துக்கு 3,979 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். வரும், 2047ம் ஆண்டுக்குள், பருவநிலை மாறுபாடுக்கு ஏற்ற வகையில் பயிரிடுவதற்கு விவசாயிகளை தயார் செய்யும் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதில், ஆராய்ச்சி மற்றும் கல்வி, பயிர் மரபணு வளங்கள் நிர்வாகம், உணவு மற்றும் கால்நடை தீவன பயிர்களின் மரபணுவை மேம்படுத்துவது, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிர் மேம்பாடு, வர்த்தக பயிர்கள் மேம்பாடு, பூச்சிகள் உள்ளிட்டவை தொடர்பான ஆராய்ச்சி, ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்

வேளாண் கல்வி, நிர்வாகம் மற்றும் சமூக அறிவியல் திட்டங்கள், 2,291 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும். இதை இந்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொள்ளும். புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி நவீனப்படுத்தப்படும். பருவநிலை மாறுபாடு பிரச்னையை சமாளிக்கும் வகையில், இயற்கை விவசாயம் உள்ளிட்டவை இதில் ஊக்குவிக்கப்படும். இதற்காக, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்

மத்திய, மாநில அரசுகளின் வேளாண் திட்டங்கள் குறித்த கையேடு வெளியீடு வேளாண் தொடர்பான தகவல்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள், 2,817 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்படும்

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில், கால்நடை சுகாதாரம் மற்றும் அவற்றின் உற்பத்தியை மேம்படுத்த, 1,702 கோடி ரூபாய் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் வாயிலாக பால் உற்பத்தி அதிகரிக்கும்.

தோட்டப் பயிர்கள் துறையில் நீடித்த வளர்ச்சியை உருவாக்க, 860 கோடி ரூபாய் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இது, விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தி தரும். இதில் காய்கறிகள், பூக்கள், மூலிகைப் பொருட்கள், மருத்துவ குணமுள்ள செடிகள் உள்ளிட்டவை அடங்கும்

தற்போது நாடு முழுதும், 700 கே.வி.கே., எனப்படும் கிருஷி விக்யான் கேந்திரா எனும் விவசாய அறிவியல் மையங்கள் உள்ளன. இவற்றை மேம்படுத்துவதற்கும், வலுபடுத்துவதற்கும், 1,202 கோடி ரூபாய் செலவிடப்படும்

இயற்கை வளங்கள் நிர்வாக திட்டங்களுக்கு, 1,115 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட விவரங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தரவுத்தளமாக ‘அக்ரி ஸ்டாக்(வேளாண் தொகுதி)’ செயல்படும். விவசாயிகள் விவரங்கள், நிலம் பயன்பாட்டு விவரங்கள், பயிர் விளைவித்திருப்பது குறித்த விவரங்கள் வேளாண் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. டிஏஎம் திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக விவசாயிகள் ஆதரவு அமைப்பு உள்ளது. வறட்சி மற்றும் வெள்ளம் குறித்து கண்காணித்தல், பருவநிலை மற்றும் செயற்கைக்கோள் தரவுகள், நிலத்தடிநீர் விவரங்கள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்க மேற்கண்ட அமைப்பு வழிவகை செய்கிறது.