ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கர்நாடக மாநில அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கூடலூர் அருகே தவளமலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயனைப்பு வீரர்களும் விரைந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel