துரை

செப்டம்பர் 6 முதல் மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆண்டு தோறும் மதுரை மாவட்டத்தில் புத்தக கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.  நடப்பாண்டிற்கான புத்தக கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் வரும் செப்டம்பர் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சி சங்கீதா அறிவித்துள்ளார்.

புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த புத்தக கண்காட்சியில் தினந்தோறும் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.