சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நள்ளிரிவு புறப்பட்டு அமெரிக்கா சென்ற நிலையில், அவர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டுக்கு தொழில்முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் பயணமாக முதலமைச்சர் தனது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகள் குழுவுடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.  இந்த நிலையில், அவர் சென்ற தனியார்  பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மு.க.ஸ்டாலின் புறப்பட்ட சென்றபிறகு விமான நிலைய அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில்,  விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் உள்ளது. இதனால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானம்  புறப்பட்டுச் சென்ற பிறகுதான் அதிகாரிகள் பார்த்ததாக கூறப்படுகிறது. உடனே இது குறித்து விமான நிலைய போலீசார் மற்றும் கட்டுப்பாட்டறைக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றத்துடன் இருந்துள்ளார். இதையடுத்துமுதலமைச்சர் சென்ற பயணிகள் விமானம் பாதுகாப்பாக துபாயில் இன்று (புதன்கிழமை) அதிகாலை தரையிறங்கியது. இதனால், அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், துபாயில் தரை இறங்கிய விமானத்தில் திடீரென பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.

மேலும், மிரட்டல் இமெயில் வந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் கணினி அடையாள எண்ணை வைத்து வைத்து சென்னை விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.