கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளிக்கு இன்று காலை இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

பள்ளி நிர்வாகம் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இந்த. தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் பள்ளியில் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது இந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மைதானத்தில் அமர வைக்கப்பட்டனர். இந்த தகவல் பரவியதால் பெற்றோர்கள் அங்கு கூடி பதற்றம் ஏற்பட்டது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி எனத் தெரியவந்துள்ளது.