பாட்னா: பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

பீகார் மாநில பாஜகவைச் சார்ந்தவர் சுஷில் குமார் மோடி. 2005ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 3 முறை பீகார் மாநில துணை முதல்வராக பதவி வகித்தார். இந்நிலையில், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு பதிலாக மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகி உள்ளார் சுஷில்குமார் மோடி.

பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இடையே பல்வேறு விரிசல்கள், முரண்பாடுகள் ஏற்படும் தருணத்தில் சுஷில் குமார் மோடி இணைப்பு பாலமாக இருந்தார். இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவில் பிளவு ஏற்படாமல் பார்த்து கொண்டதில் சுஷில்குமார் மோடி அதிக பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.