சென்னை: இந்துக்கள் குறித்து மக்களவையில் பேசிய ராகுல்காந்திக்கு உடனடியாக மன நல ஆலோசனை தேவை என பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் தெரிவித்து உள்ளார். ராகுல் காந்தி மனநல ஆலோசனை பெற வேண்டுமென மண்டி தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத்  வலியுறுத்தி உள்ளார்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று   பேசிய எதிர்க்கட்சி தலைவரும்,  பரேலி தொகுதி எம்.பி. ராகுல் காந்தி,  மோடி அரசு மற்றும் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய  வகையில் பேசினார். அப்போது,  இந்துக்கள் வன்முறையாளர்கள் என்றும்,   `பாஜக இந்துக்கள் அல்ல’ என்று விமர்சித்திருந்தார். ராகுலின் பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் கருத்துகளை விமர்சித்து பாஜக எம்.பி. நடிகை கங்கனா ரணாவத் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையில் ராகுல் காந்தி ஜி தெரிவித்துள்ள அனைத்து பொறுப்பற்ற கருத்துகளுக்கு மத்தியில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் ஒரு ராகுல் அல்ல, இருவராக உள்ளேன். அதில் ஒருவர் அரசமைப்புக்காக வாழ்ந்து வருவதாகவும், மற்றொரு ராகுல் மடிந்துவிட்டதாகவும்” குறிப்பிட்டுள்ளார். இது கேளிக்கையான விஷயமல்ல. ராகுல் ஜி உடனடியாக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

குடும்பத்திலிருந்தும், தாயாரிடமிருந்தும் வரும் அழுத்தங்களால், நீங்கள் யாராக இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அதைவிடுத்து வேறொருவராக இருக்க நேரிடுவதால் இதுபோன்ற அடையாளச் சிக்கல்கள் ஒருவருக்கு உண்டாகும். இதனை பெரும்பாலான மனநல ஆலோசகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

ராகுல் ஜியின் பேச்சில் ஏராளமான சிக்கல்களும் வலிகளும் உள்ளன.  மதிப்புக்குரிய பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் ராகுல் ஜி பேசும்போதும், தன்னால் இருவேறு நபர்களைக் காண முடிவதாகத் தெரிவித்துள்ளார். இது போன்ற கருத்துகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நாடாளுமன்றத்தில் இதுபோன்ற நடத்தைகள் குறித்த மனநலனைப் பற்றி நினைத்துப் பார்ப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

இந்துக்களை வன்முறையாளர்கள் என கூறி விளம்பரம் தேடுகிறார் ராகுல்காந்தி! தமிழிசை கடும் கண்டனம்…