டெல்லி

வேளாண் துறையை 3 கூட்டணிக் கட்சிகள் கோரி உள்ளதால் பாஜக நெருக்கடியில் சிக்கி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றி பெற்றும், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாக உள்ளது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பாஜக பெரும்பான்மையை பெற பா.ஜ.க. தவறிய நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவர் தலைமையிலான கட்சிகளின் ஆதரவு தேவையாக உள்ளது.

இருவரும் பாஜக கூட்டணிக்கு தங்களுடைய முழு ஆதரவை தெரிவித்து உள்ளனர்.   , மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தபோதும், சில நிபந்தனைகளை விதித்துள்ளன. இதன்படி, போக்குவரத்து, ஐ.டி., வேளாண்மை, ஊரக வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் நீர்வள துறை போன்றவற்றை தரும்படி கூட்டணி கட்சிகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக வேளாண் துறையை மட்டும் 3 கட்சிகள் கேட்டு வருகிறது. இந்த துறை அமைச்சர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என 2 எம்.பி.க்களை மட்டுமே கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி பா.ஜ.க.வுக்கு நிபந்தனை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது ஏற்கனவே வேளாண் துறையை தெலுங்கு தேசம் கட்சிகளும் கேட்டு வருகின்றன. இதனால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.