பாட்னா

பீகார் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 65% அதிகரிக்கும் சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தற்போது பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  கடந்த ஆண்டு அம்மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் விவரங்கள் அம்மாநில அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வெளியிடப்பட்டது.

இதையொட்டி பீகாரில் உட இட ஒதுக்கிட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்துவதற்கான திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது., பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 43 சதவீதமும், பட்டியலின மக்களுக்கு 20 சதவீதமும், பழங்குடியின மக்களுக்கு 2 சதவீதமும் உயர்த்தப்பட்டது.

பாட்னா உயர்நீதிமன்றத்தில் இந்த இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.  இன்று இந்த மனு தலைமை நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான உயர்நீதிமன்ற  அமர்வில் விசாரனைக்கு வந்தது.

நீதிபதி அரசியல் சாசனம் வழங்கிய சம உரிமையை இந்த திருத்த சட்டம் பின்பற்றவில்லை என்பதால், 65 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திருத்தத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.  உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உச்ச்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.