திருப்பூர்

பெங்களூரு – திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது/

சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல்

”பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த ரயில் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு-திருவனந்தபுரம் (வண்டி எண்.06555) வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமைகளில் வருகிற ஜூன் மாதம் 6-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வரை(17 சேவைகள்) பெங்களூருவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த ரயில் திருப்பூருக்கு சனிக்கிழமைகளில் அதிகாலை 4.03 மணிக்கு வந்து 4.05 மணிக்கு புறப்படும்.

திருவனந்தபுரம்-பெங்களூரு (06556) வாராந்திர சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிற ஜூன் மாதம் 8-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 28-ந் தேதி வரை(17 சேவைகள்) திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

இந்த ரயில் திருப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 11.53 மணிக்கு வந்து 11.55 மணிக்கு புறப்படும்.”

என்று தெரிவித்துள்ளார்.