சென்னை: சென்னை மக்கள் எதிர்நோக்கியுருக்கும் புத்தகத் திருவிழாவை வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு சாதனை அளவாக சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களும் வழக்கம்போல அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

இந்த புத்தகக் கண்காட்சியை, வரும் 8ம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சியில், அனைத்து நாட்களிலும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.
இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில், தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் தமிழ் பதிப்பகங்கள் மற்றும் பென்குயின் (Penguin), ஹார்ப்பர் காலின்ஸ் (HarperCollins) போன்ற சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
புத்த கண்காட்சியில், தினமும் மாலையில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறும். இந்த ஆண்டு முதன்முறையாக குழந்தைகளுக்காக தனி பூங்கா (Children’s Park) மற்றும் திருநங்கைகளால் நடத்தப்படும் ‘Queer’ பதிப்பகத்திற்கு எனத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 49-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி (BAPASI) விருதுகளுக்கான வெற்றியாளர்கள் பட்டியலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
அதன்படி, கவிதை – கவிஞர் நா. சுகுமாரன் சிறுகதை -எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா நாவல் -எழுத்தாளர் ரா.முருகன் உரைநடை -பேராசிரியர் பாரதிபுத்திரன் (ச.பாலுசாமி) நாடகம் – கே.எஸ். கருணா பிரசாத் மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்பாளர் வ.கீதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விருதும் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் கொண்டது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]