சென்னை

ன்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் திரும்ப பெற்றுள்ளதால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட உள்ளது.

.

வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாகவும் காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை – தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் எனவும் தெரிவித்திருந்தது.

அந்த நேரத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தாலும். சில இடங்களில் மழை பெய்யவில்லை.

எனவேசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ‘ரெட் அலர்ட்’ விலக்கி கொள்ளப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘ரெட் அலர்ட்’ திரும்பப் பெறப்பட்டதை அடுத்து இன்று  சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.