ஹோசபேட்

ர்நாடகா மாநிலம் ஹோசபேட் அருகே உள்ள துங்கபத்ரா அணை மதகு உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் விஜயநகரா மாவட்டத்தில் ஹோசபேட் அருகே அமைந்துள்ள துங்கபத்ரா அணையின் 19 ஆம் எண் கதவு உடைந்து அதன் வழியே அணையிலிருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. நேற்றிரவு 11 மணியளவில் கதவின் சங்கிலி இணைப்பு உடைந்துள்ளதால் அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேறுகிறது

எனவே ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் நீர் வரத்து எப்போது வேண்டுமானாலும் விநாடிக்கு 3 லட்சம் கன அடியை எட்டும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு குறிப்பாக, கோப்பல், விஜயநகரா, பெல்லாரி, ராய்ச்சூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 33 மதகுகளும் திறக்கப்பட்டு அவற்றின் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அணியில்.உடைந்துள்ள கதவினை சரிசெய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அதிக அளவு தண்ணீர் வெளியேறுவதால் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.