துரை

துரையில் விமான நிலைய அதிகாரிகளுடன் அதிமுகவிஅர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு விமானம் மூலம் இன்று காலை வந்தார். கட்சியின் பொதுச்செயலாளரை வரவேற்க, மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள ஏராளமான அதிமுக நிர்வாகிகள், மதுரை விமான நிலையத்துக்கு கார்களில் வந்தனர்.

அப்போது பயணிகள் வெளியே வரும் பகுதியில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வந்த கார் நின்று கொண்டிருந்தததால் விமான நிலைய அதிகாரிகள் அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறும் இல்லையென்றால் அந்த காரை லாக் செய்துவிடுவதாகவும் கூறியதாக தெரிகிறது.

எனவேஅங்கிருந்த அதிமுக நிர்வாகிகளுக்கும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையொட்டி அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.