நெட்டிசன்:

கோதண்டராமன் சபாபதி அவர்கள் எழுதிய முகநூல் பதிவு:

எல்லாரும் குமுதத்தை கண்டித்தாயிற்றா.?

கண்டிக்காதவர்கள் முதலில் போய் கண்டித்துவிட்டு இங்கே வரவும்.

கண்டித்தவர்களுக்கு…

ஆண்மை என்று எதைச்சொல்வது.? புணர்வில் ஈடுபட்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதியையா.?
அடுத்தத்தெருவிற்குள் சென்றுவிட்டு அங்கிருக்கும் நாய்களிடம் அகப்பட்டு வாலை கால்களுக்குள் சுருட்டி மடக்கி பம்மும் நாய்போல ஜெயலிதா என்கிற சர்வாதிகாரியிடம் பம்மிய பலர் பிள்ளைபேறு உடையவர்களே.

அவர்கள் ஆண்மை மிக்கவர்களா.? இல்லைதானே.?!

பிறகு எப்படி சீமானுக்கு மகப்பேறு இல்லாதது மட்டும் ஆண்மையோடு தொடர்புபடுத்தி நக்கலடிக்கப்படுகிறது இங்கு.

போகட்டும்.

அரசியலில் இருக்கும் பெண்களை அவர்களது வார்த்தைகளுக்கும் செய்கைகளுக்கும் எதிர்வினையாக நகைச்சுவை யாக நக்கலடிக்கும் பதிவுகள் சரி.

நேரடியாக அவர்கள் உடலோடும் உடலுறவோடும் சம்மந்தப்படுத்தி எத்தனை பதிவுகள்.?

அது மட்டும் எந்த வகை நியாயம்.?

விட்டுத்தள்ளுங்கள்.குமுதத்தை கண்டிக்கச்சென்றவர்கள் எல்லாம் வந்துவிட்டீர்களா.?

இப்போது குழுவாக சத்தமிட்டு உரக்கச்சொல்வோம்.

” அரசியல்பேசும் பெண்களையெல்லாம் கீழ்த்தரமாக பேசுவது எங்க ஏரியா. குமுதமே இதில் நீ உள்ளே வராதே.!!”