புதுச்சேரி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் வரும் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்  என்று, இன்று புதுச்சேரியில் கூடிய பல்வேறு அமைப்புகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி நதி நீர் தொடர்பான மேல்முறையீடு வழக்கில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த 6 வார காலக்கெடு 29ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளது.

புதுச்சேரி காங்கிரஸ் அரசும் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் என அறிவித்துள்ள நிலையில், வரும் 11ந்தேதி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.