அமராவதி:
ஆந்திராவில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் இன்று ராஜினாமா செய்ய உள்ளனர்.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் ஆட்சி அமைத்து, அடுத்த மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன.
இந்நிலையில், அமைச்சரவையை மாற்றியமைக்க, ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதில், புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பளிக்கவும், அவர் முடிவு செய்துள்ளார். ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு வசதியாக, தற்போது அமைச்சர்களாக உள்ள அனைவரும், இன்று ராஜினாமா செய்கின்றனர்.
Patrikai.com official YouTube Channel