ரியலூர்

சுமார் 1 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூரில் திருடு போன ஆஞ்சனேயர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது

கடந்த 2012ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலிலிருந்து வரதராஜ பெருமாள், தேவி, பூதேவி, ஆஞ்சநேயர் ஆகிய உலோக சிலைகள் திருடு போனது. இவற்றில் ஆஞ்சநேயர் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு பின்னர் ஏலம் விடப்பட்டது தெரிய வந்தது.

இதையொட்டி தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைyinar நடத்திய விசாரணையில், ஆஞ்சநேயர் சிலையை ஆஸ்திரேலியாவில் தனி நபர் ஒருவர் வைத்திருப்பது தெரிய வந்தது.

எனவே காவல்துறையினர் அந்த சிலையை மீட்க உரிய நடவடிக்கை எடுத்தனர். சிலையை வைத்திருந்த நபர் அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் சிலையை ஒப்படைத்தார்.  பிறகு தமிழகம் கொண்டு வரப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் ஒப்படைத்தனர்.

அதைத் தொடர்ந்து சிலையை நேற்று வெள்ளூருக்கு கொண்டு வந்து கிராம மக்கள் முன்னிலையில் வரதராஜ பெருமாள் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஒப்படைத்தார்.

அவர் செய்தியாளர்களிடம்,‘

”இந்த சிலையின் மதிப்பு ₹15 லட்சம் இருக்கலாம். இது 16, 17ம் நூற்றாண்டைச் சார்ந்த உலோக சிலையாகும். இதேபோல், பல்வேறு சிலைகள் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளது. அவற்றையும் இந்தியா கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”

எனத் தெரிவித்துள்ளார்.