அமராவதி: ஆந்திராவில் இன்று 7,895 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் முதலில் கொரோனா பாதிப்புகள் குறைவாகத் தான் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து அதன் பாதிப்பு மிக அதிகமாக பதிவாகி வருகிறது.
இந் நிலையில் ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 7,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதார துறை கூறி இருக்கிறது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு 3,53,111 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரேநாளில் கொரோனாவால் 93 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,282 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இன்று 7,449 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர்.
இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,60,087 ஆக பதிவாகி இருக்கிறது. மாநிலத்தில் 89,742 பேர் மருத்துவமனைகளில் இன்னமும் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சையில் உள்ளனர் என்று சுகாதார துறை கூறி உள்ளது.
[youtube-feed feed=1]