தராபாத்

ருங்கிணைந்த ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஸ்ரீனிவாஸ் நேற்று மரணம் அடைந்துள்ளார்.

நேற்று ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் அமச்சரான மூத்த காங்கிரஸ் தலைவர் டி. ஸ்ரீனிவாஸ் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இந்த தலவலை அவரது மகனும், நிஜாமாபாத் எம்.பி.யுமான டி. அரவிந்த் தெரிவித்துள்ளார்.

சுமார் 76 வயதான ஸ்ரீனிவாஸ் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.  ஒருங்கிணந்த ஆந்திர மாநிலத்தில் காக்கிரஸ்  தலைவராகவும், மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும், 2009-ம் ஆண்டு ராஜசேகர் ரெட்டி அரசில் உயர் கல்வி மற்றும் இடைநிலைக்கல்வி மந்திரியாக ஸ்ரீனிவாஸ் பதவி வகித்துள்ளார்.

அவர் காங்கிரசிலிருந்து விலகி 2016 முதல் 2022ம் ஆண்டு வரை பாரத ராஷ்டிர சமிதி மாநிலங்களவை உறுப்பினரானார். பிறகு மீண்டும் காங்கிரசிலேயே சேர்ந்தார். அவரது மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா அமைச்சர்கள் மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.