விழுப்புரம்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கட்ந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்தார். எனவே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாளை முதல் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது.  இன்று தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற்று கூட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பிறகு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவு செய்து, பின்னர் அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம் என்று தெரிவித்தார்.