டெல்லி

த்திய அரசு கேரளவுக்கு 5 நாட்களுக்கு முன்பே வெள்ள்ம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவையொட்டி மீட்புப்பணி 2 வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்புப்படை, விமானப்படை உள்ளிட்டவை இணைந்து களம் இறங்கி உள்ளன. நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

மாநிலங்களவையில் வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது மத்திய அமைச்சர் அமித்ஷா ,

கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே கனமழை குறித்து மத்திய அரசு எச்சரிக்கை வழங்கியது. இரு முறி மழை மற்றும் நிலச்சரிவு குறித்து கேரளாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  ஆயினும் மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கையை கேரள அரசு புறம் தள்ளியது.  ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால்தான் தேசிய பேரிடர் மீட்புப்படை அங்கு சென்றது.

மத்திய அரசு குஜராத்தில் சூறாவளி ஏற்பட்டபோது அது குறித்து 3 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை வழங்கியது. அந்த எச்சரிக்கையை குஜராத் அரசு சீரியசாக எடுத்துக்கொண்டதால் ஒரு பசு கூட இறக்கவில்லை..  இந்தியா இயற்கை பேரிடர் குறித்து 7 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை வழங்கும் முதன்மையான 4 நாடுகளில் ஒன்றாக திகழ்வதுடன் இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்பு சரியாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசிடம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 90 சதவீதம் தொகையை செலவழிப்பதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.  மத்திய அரசு எவ்வித அரசியல் வேறுபாடும் இன்றி கேரள மாநிலத்திற்கு துணை நிற்கும். எனவே தயது செய்து மத்திய அரசு கொடுக்கும் எச்சரிக்கையை மாநில அரசுகள் படித்து பார்க்க வேண்டும்.

என்று கூறியுள்ளார்.