கடரின் பெர்க்

ஷ்யாவில் நடைபெறும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதன் முறையாக இந்திய வீரர் அமித் பங்கல் முன்னேறி உள்ளார்

தற்போது ரஷ்யாவில் ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.    இதில் 52 கிலோ பிரிவில் இந்தியாவின்  சார்பில் அமித் பங்கல்  பங்கேற்றுள்ளார்.    அவர் கால் இறுதிச் சுற்றில் பிலிப்பன்ஸின் கார்லொ பாலம் உடன் மோதி 4-1 என்னும் கணக்கில் வெற்றி பெற்றார்.

அதன் பிறகு நடந்த அரை இறுதிச்  சுற்றில் அமித் பங்கல் கசகஸ்தானின் சாகென் பிபோசினோவ் உடன் மோதினார்.   இந்த போட்டியில் அமித் 3-2 என்னும் கணக்கில் சாகெனை வீழ்த்தினார்.   அதையொட்டி அவர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்த போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்னும்   பெருமையை அமித்  பங்கல் பெற்றுள்ளார்.

மற்றொரு அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் மனிஷ் கவுசிக் தோல்வி அடைந்துள்ளார்.   அவரை கியூபா நாட்டை சேர்ந்த ஆண்டி குரூஸ் தோற்கடித்துள்ளார்.