அமேசானின் முதல் தொகுதி இணைய செயற்கைக்கோள்கள் திங்களன்று சுற்றுப்பாதையில் ஏவப்பட்டன, இது தற்போது ஸ்பேஸ்எக்ஸின் ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்க்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் மெகா விண்மீன் கூட்ட சந்தையில் சமீபத்திய நுழைவு என்பது குறிப்பிடத்தக்கது.

2019 முதல் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏற்கனவே 8,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க்களை ஏவியுள்ளது. அவற்றில், 7,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் பூமியிலிருந்து சுமார் 300 மைல்கள் (550 கிலோமீட்டர்) தொலைவில் சுற்றுப்பாதையில் உள்ளது.

இந்த நிலையில், அமேசானின் ப்ராஜெக்ட் குய்பர் சுமந்து சென்றுள்ள செயற்கைக்கோள்கள் கிட்டத்தட்ட 400 மைல்கள் (630 கிலோமீட்டர்) உயரத்தில் சுற்றுப்பாதையில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது தனது சொந்த ராக்கெட் நிறுவனமான ப்ளூ ஆரிஜினை நடத்தி வரும் அமேசான் நிறுவனம் ஜெஃப் பெசோஸால், உலகம் முழுவதும் வேகமான, மலிவு விலையில் பிராட்பேண்ட் சேவையை வழங்குவதற்காக 3,200 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், நட்சத்திரப் பார்வையாளர்கள் (Stargazers) குறைந்த சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களின் வேகமாக வளர்ந்து வரும் விண்மீன் கூட்டங்களை எதிர்க்கின்றனர், அவை அவதானிப்புகளைக் கெடுக்கும் என்று வாதிடுகின்றனர். தவிர அதிகளவிலான செயற்கைக்கோள் மோதல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அஞ்சுகிறார்கள்.