சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 6 எம்.பி.க்களுமை நாளை மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்க உள்ளனர். அவர்களுக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்களான, தி.மு.க. சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அ.தி.மு.க. சார்பில் தனபால், இன்பதுரை, மக்கள் நீதி மயயம் சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் நாளை பதவியேற்க உள்ளனர்.
மாநிலங்களவை எம்.பி.யாக நாளை பதவியேற்க உள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பில் வென்ற மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்ய உள்ளேன். பெருமையோடு இன்று டெல்லி செல்கிறேன். பாராளுமன்றத்தில் கன்னிப்பேச்சு குறித்து இப்போது சொல்ல முடியாது. உங்கள் வாழ்த்துகள், மக்கள் வாழ்த்துகளுடன் டெல்லி சென்று உறுதிமொழி ஏற்க உள்ளேன் என்றார்.
கமல் உள்பட மாநிலங்களவை தேர்தலில் மனுதாக்கல் செய்த 6 பேரும் ராஜ்யசபா உறுப்பினர்களாகிறார்கள்…
அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார்? தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் போட்டி!