லக்னோ:

உ.பி.தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் பா.ஜ தற்போதைய நிலவரப்படி 319 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

சமாஜ்வாடி கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் வாடி கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முராக்ப்பூர் தொகுதியில் போட்டியிட்ட உ.பி.முதலவர் அகிலேஷ் யாதவ் தோல்வி அடைந்தார்.

தேர்தல் முடிவு குறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘தேர்தலில் தோல்வி அடைந்துள்ள போதும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும். இது இரு இளம் தலைவர்களின் கூட்டணியாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.