மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமானம் திடீரென விபத்துக்கு உள்ளாது. இந்த விமான விபத்தில் அஜித் பவார் உள்பட அதில் பயணம் செய்தவர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிறிய ரக விமானத்தில் பயணித்த, அஜித் பவாரின் பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் மற்றும் பயணித்த 2 விமானிகள் அனைவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான புணே மாவட்டம் பாராமதியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் அஜித் பவார் புறப்பட்டுள்ளார்.
இந்த விமானம், மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் இன்று காலை 8.45 மணியளவில் தரையிறங்க முயற்சித்தபோது, நிலைத் தடுமாறி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் பவார் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், விஎஸ்ஆர் நிறுவனத்திற்குச் சொந்தமான லியர்ஜெட் 45 ரக விமானம் (பதிவு எண் VT-SSK) நேற்று (செவ்வாய்க்கிழமை) அன்று பாராமதி விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகி தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பணியாளர்கள் உட்பட ஐந்து பேர் இருந்தனர். அதாவது, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், தலைமை விமானி மற்றும் துணை விமானி ஆகியோருடன், மேலும் இரண்டு பணியாளர்களான ஒரு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோருடன் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார்.