சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ நாடு சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்று  2021-2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத்தாக்கல் செய்கிறது. இதன் காரணமாக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

இந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.