சென்னை: அதிமுக எம்எல்ஏக்களே அறநிலையத்துறை சார்பில், கல்லூரிகள் கேட்டுள்ளனர் என  எடப்பாடியின் அறநிலையத்துறை கல்லூரிகள் விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் மருதமலை கோயில் சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் கோரிக்கை வைத்தார். அதிமுக எம்எல்ஏக்கள் பெரியபுள்ளான், அமுல் கந்தசாமி, ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கோயில் சார்பில் கல்லூரி வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளனர். வரலாறு தெரியாமல், சங்கிகள் வைக்கும் கோரிக்கையை இபிஎஸ் வெளிப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று கூறிய அமைச்சர் சேகர்பாபு,

 MGR, ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. எம்ஜிஆர் செய்ததும் சதிச் செயலா? அதிமுக தலைவர்களை இபிஎஸ் ஏற்கவில்லை என தெளிவாகத் தெரிகிறது என்றவர், பாஜக எனும் மலைப்பாம்பு அதிமுகவை சிறுக சிறுக விழுங்கி வருகிறது. சோழர்கள் காலத்தில் கூட கோவில் நிதி கல்விக்கு பயன்படுத்தப்பட்டது. உணவு, கல்வி, மருத்துவத்திற்கு அதிக கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது 1000 ஆண்டுகளுக்கு முன்பே கோயில்களில் கல்விச்சாலையும், மருத்துவ சாலையும் மன்னர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது.

கல்லூரி, பல்கலைக்கழகம் கோயில் கட்டடக்கலையை கொண்டு கட்டிக்கொள்ளலாம் என சட்டத்தில் இடம் உள்ளது. திருக்கோயில்கள் சார்பில் 25 பள்ளிகள், 1 பாலிடெக்னிக் கல்லூரி, 9 கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 22,455 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை அறப்பணியுடன், அறியாமையை நீக்கும் கல்வி பணியையும் செயல்படுத்தி வருகிறது; வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மாணவர்களுக்கு தான் கல்லூரிகளில் சேர இடம் அளிக்கப்படுகிறது.
அறநிலையத் துறை சட்ட விதிகளில் உள்ளதுபோலத்தான் கல்வி நிறுவனங்களை தொடங்கியுள்ளோம். திமுக ஆட்சியில் அரசு சார்பில் 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்; 19 திருக்கோயில்கள் மருத்துவமனைகளை தொடங்கி உள்ளோம். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கோயில் நிதியில் கல்லூரிகள் இயங்குகின்றன.

சோழர் காலத்தில்கூட கல்விச் சாலை இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பாஜகவின் ஊதுகுழலாக இருந்து பேசுகிறார் பழனிசாமி; திட்டமிட்டு விஷ விதைகளை பரப்புகிறார். சங்க பரிவாரங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும் என பழனிசாமி பேசுகிறார். அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் மருதமலை கோயில் சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் கோரிக்கை வைத்தார் என்றார்.

இதற்கிடையில், அதிமுக எம்எல்ஏக்கள் வைத்த கோரிக்கையானது, கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில்தான் கோவில் வருமானத்தில் இருந்து கல்லூரிகள் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.