ஓசூர்: பெங்களுருவில் இருந்து தமிழகம் நோக்கி வந்துகொண்டிருக்கும் சசிகலா, தனது காரில் அதிமுக  கொடியை கட்டியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தமிழக-கர்நாடக எல்லையில் சசிகலா பயணிக்கும் காரில் உள்ள அதிமுக கொடியை அகற்ற அவகாசம் கொடுக்கப்படும் என கிருஷ்ணகிரி காவல்துறை எச்சரித்துள்ளது.  அவராக அகற்றாவிட்டால் சசிகலா அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் அடுத்த இடத்தில் கொடி கட்டாயமாக அகற்றப்படும் என கிருஷ்ணகிரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பு ஏ.எம்.எம்.கே கிருஷ்ணகிரி மாவட்ட செயல்பாட்டாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஆனால்,  அதுதொடர்பாக  எங்களுக்கு இதுவரை எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும்,
சசிகலா அதிமுக பொதுச் செயலாளர்  எனவே, அவர் அதிமுக  கொடியைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது. என்று தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.