சென்னை: அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 30ந்தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 30ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 30.8.2025 (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.