அகமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாத் விமான விபத்தில் பலியானோரில், 187 உடல்கள் மரபணு சோதனை வாயிலாக அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, குஜராத் மாநில அமைச்சர் ருஷிகேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

குஜராத்த் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே   நடந்த, ‘ஏர் இந்தியா’ விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். விமானம் மோதிய கல்லுாரி விடுதியில் மருத்துவ மாணவர்கள் ஐந்து பேர் உட்பட 29 பேர் பலியாகினர். மொத்தம் 270 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தின்போது விமானம் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தால்,   இறந்தவர்களின் உடல்கள் கருகியதால், அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து,  விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களிடம் ரத்தம் பெறப்பட்டு, டி.என்.ஏ., எனப்படும், மரபணு சோதனை வாயிலாக உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

நேற்று மலை வரை நடந்த சோதனையில், 210 பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் பொருந்தின என்று கூறிய குஜராத் அமைச்சர் ருஷிகேஷ் படேல் , 187 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்றவர்,  டி.என்.ஏ.,க்களை ஒப்பிடும் பணி தொடர்ந்து நடப்பதாகவும் கூறினார்.

இதுவரை  ”ஒப்படைக்கப்பட்ட உடல்களில் 127 பேர் இந்தியர்கள், நான்கு போர்த்துக்கீசியர்கள், 27 பிரிட்டிஷார், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர். 127 இந்தியர்களில் 123 பேர் விமானப்பயணியர். காயமடைந்த 71 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சையின்போது மூவர் இறந்தனர்,” என்றும் தெரிவித்துள்ளார்.