வேலூர்:
நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் அடிப்படையிலேயே இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வகையில் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தி வந்த வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியானது.
தற்போது இந்த தகவலை வேலூர் சிஎம்சி கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.‘‘நீட் தேர்வில் தேர்வானவர்களை மட்டுமே அட்மிஷனுக்கு அழைக்கிறோம். வதந்திகளை நம்பாதீர்கள்’’ என வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி) அறிவித்துள்ளது
Patrikai.com official YouTube Channel