கரி

ந்திர சட்டசபைத் தேர்தலி நகரி தொகுதியில் நடிகை ரோஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தற்போது பாஜக கூட்டணி 294 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 232 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.  பின்னர் மற்ற கட்சிகள் 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இன்று ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தலின் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.  இதில்  சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி 130 இடங்களில் முன்னிலை வகித்து இரண்டு தொகுதிகளில் வெற்றி  பெற்று ராஜமுந்திரி, உண்டி ஆகிய பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

அடுத்தபடியாக பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 20 இடங்களிலும்,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும்,  பாஜக 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.   ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா 39,425 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.