தராபாத்

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் சகோதரர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான ரகுல் பிரீத் சிங் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் கடந்த 12 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது இவரது சகோதரர் அமன் பிரீத் சிங் போதைப்பொருள் வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டுவரப்படுவதாக அம்மாநில போதைப்பொருள் தடுப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. எனவே சம்பவ இடத்திற்கு சென்று போதைப்பொருள் கடத்தல் முயற்சியை காவல்துறையினர் முறியடித்தனர்.

தெலுங்கானா காவல்துறையினர் நரசிங்கியின் ஹைதர்ஷாகோட்லாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்து ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 199 கிராம் கோகோயின், 2 பாஸ்போர்ட்கள், 2 பைக்குகள் மற்றும் 10 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதையொட்டி பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் அமன் பிரீத் சிங் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவேகடந்த ஆண்டு, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ரகுல் பிரீத் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.