கேரளா சின்னத்திரையின் பிரபலமாக இருக்கும் நபர்களில் ஒருவர் நிமிஷா பிஜோ. இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார்.

சமீபத்தில் அரன்முலா கோயிலுக்கு சொந்தமான பாம்பு வடிவிலான படகில் நடிகை நிமிஷா பிஜோ போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். பம்பை ஆற்றில் சாமி ஊர்வலத்தின்போது பயன்படுத்தப்படும் அந்த படகில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து செருப்பு காலில் ஏறி புகைப்படங்களை எடுத்து அதனை பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டோஷூட் செம வைரலாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.கேரள தேவஸ்தானம் நிமிஷா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தனர்.இதனையடுத்து நிமிஷாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

தனக்கு இதன் புனித தன்மை தெரியாது என கூறி மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு இந்த வழக்கில் பெயில் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.