கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தவர் மாரி செல்வராஜ்.

அந்த படத்தில் கதிருக்கு அப்பாவாக நடித்த நாட்டுப்புற கலைஞரான தங்கராசுவையும் சினிமா ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டனர்.

நெல்லையில் வசித்து வரும் தங்கராசு வீடு அண்மையில் பெய்த கனமழையில் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாம். அவரின் வீட்டை சீரமைக்க நெல்லை மாவட்ட கலெக்டர் முன்வந்திருக்கிறாராம்.

தங்கராசு தனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தவர்கள் ஏதேனும் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறாராம்.

 

[youtube-feed feed=1]