சென்னை:
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்ய இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel