டெல்லி

ன்று பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றார்

மொத்தம் 543 இடங்களை கொண்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைத்தது.  நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாடு, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் அவர் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 542 ஆக உள்ளது.

கடந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பி.கள் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்ட போதும் ஒருசில காரணங்களுக்காக சில எம்.பி.க்கள் கால தாமதமாக பதவி ஏற்றுக கொண்டுள்ளனர்.

இன்று நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சத்ருகன் சின்ஹா மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பி.க்களில் கடைசி நபராக இன்று சத்ருகன் சின்ஹா மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

[youtube-feed feed=1]