பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நடிகர் ஜெயம் ரவி தனது வசிப்பிடத்தை மும்பைக்கு மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக அறிவித்த ஜெயம் ரவி பின்னர் தனக்கு சொந்தமான பொருட்களை தனது மனைவியிடம் இருந்து மீட்டு தரக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜெயம் ரவியிடம் செய்தியாளர்கள் “இனி மும்பை தான் உங்கள் வசிப்பிடமா ?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “நான் ஏற்கனவே வந்தாச்சு” என்று பதிலளித்தார் ஜெயம் ரவி.

https://x.com/CinemaWithAB/status/1839599256769814901

மேலும், மும்பை வந்தாலே தனது மனதுக்குள் குஷி வந்துவிடுகிறது என்றும் கூறினார்.

இதையடுத்து ஜெயம் ரவி இனி பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.