டெல்லி

ம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையிலேயே கொல்ல பாஜக சதி செய்வதாக கூறி உள்ளது.

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம்,

“டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து டெல்லி ஆளுநரும், பாஜகவும் பொய்யான தகவல்களை வெளியிடுவது சந்தேகத்தை அதிகரிக்கிறது. ஆளுநரும், பாஜகவும் கெஜ்ரிவால் உயிருடன் விளையாடுகிறார்கள்.

கெஜ்ரிவாலின் வழக்கறிஞருக்கு திகார் சிறை நிர்வாகம் சட்டரீதியாக அளித்த மருத்துவ அறிக்கையே சிறையில் கெஜ்ரிவாலுக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும் என்பதை காட்டுகிறது.

அவருக்கு கடந்த ஜூன் 3-ந் தேதிக்கும், ஜூலை 7-ந் தேதிக்கும் இடையே சர்க்கரை அளவு 26 தடவை குறைந்துள்ளது. கெஜ்ரிவாலை சிறையிலேயே  கொல்ல பாஜக சதி செய்கிறது.

கெஜ்ரிவால் அதிகமாக சாப்பிடுவதாக முதலில் கூரிய பாஜக தற்போது, அவர் எதுவுமே சாப்பிடாமல் இருப்பதாக கூறுகிறது. உயிரை மாய்த்துக் கொள்ள யாராவது தங்களது இப்படி செய்வார்களா?”

என்று கூறி உள்ளார்.