விருதுநகர்:  ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமி தரிசனம்  செய்ய  பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி மற்றும் அமாவாசையையொட்டி பக்தர்கள் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கமாகும்.

இந்த நிலையில் ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, பக்தர்டள்  4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி  நாளை ( 03/07/24)  முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள்  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதை வழியாக மட்டுமே சென்று வர வேண்டும் எனவும் இரவில் தங்குவதற்கும், ஆற்றுப் பகுதிகளில் இறங்கி குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.