Skip to content
  • Sun. Jul 12th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம்… தமிழகஅரசு தாராளம்…

Jun 25, 2020

சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் உச்சநீதி மன்ற உத்தரவால் முடங்கி உள்ள நிலையில்,  ஆணையத்தின் ஆயுட்காலத்தை மேலும் 4 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சும்மா இருக்கும் ஆணையத்துக்கு மேலும் அவகாசம் வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டது. இந்த ஆணையம்  ஜெ.மரணம் தொடர்பாக அவரது உறவினர்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் விசாரணை நடத்தி வந்தது. விசாரணைக்கு அப்போலோ நிர்வாகம் ஒத்துழைப்பு மறுத்து வந்தது.

இதையடுத்து, அப்போலோ தரப்பில் நீதிமன்றங்களை நாடியது. சென்னை உயர்நீதி மன்றம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட நிலையில், உச்சநீதி மன்றமோ, ஆணையத்தின் விசாரணைக்கே தடை போட்டது. இருந்தாலும் ஆணையத்தின் ஆயுட்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டே வருகிறது.

ஆணையனத்தின் அவகாசம் இந்த மாதம் 24ந்தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 4 மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடந்த திங்கட்கிழமை அன்று கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து,   ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது.

தற்போது, 8வது முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது. தடை விதிக்கப்பட்டு ஓராண்டை கடந்த நிலையிலும், ஆணையம் விசாரணை ஏதும் நடத்தாமலே உள்ளது. அதன் ஆயுட்காலம் மட்டும் நீட்டிக்கப்பட்டே வருகிறது. தற்போது மேலும் 4 மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே  புதிய தலைமைச் செயலக கட்டு மானத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, அது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கு  தடை விதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற    நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் செயல்படாத ரகுபதி ஆணையத் துக்கு ரூ.2.23 கோடியை தமிழக அரசு வீணாக செலவழித்துள்ளது என்று குற்றம் சாட்டியதும், அதனால் சலசலப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Post navigation

தமிழக காங்கிரஸில் 36 மாவட்டத் தலைவர்கள் பட்டியல் வெளியீடு… தமிழக காங்கிரஸ் மறுப்பு
கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer