சென்னை:

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நலையில், திருமுல்லைவாயில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  52,334ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு  625 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை  28,641  ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் பாதிக்கப்ப்டடோர் எண்ணிக்கை 37,070 ஆக உயர்ந்துள்ளது.  16,882பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,19,686 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 501 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை காவல்துறையில்  இதுவரை கொரோனாவால் 731 போலீசார் பாதிக்கக்ட்டுள்ளனர். அவர்களில்  278 பேர் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.  சமீபத்தில் மாம்பலம் காவல்துறை ஆய்வாளர் முரளி உயிரிழந்தார்.

இந்த நிலையில், திருமுல்லைவாயில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.