Skip to content
  • Sun. Jul 12th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம்

Jun 15, 2020

சென்னை:

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர  மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நெல்லை, தூத்துக்குடியில் லேசான மழைக்கு வாய்ப்ப உள்ளது, சென்னையில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாளை புதுவை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 3 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் தேவலா, கோவை மாவட்டம், அவலாஞ்சி, வால்பாறை, சோலையாறு, சின்கோனா ஆகிய பகுதிகளில் தலா இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது

ஜூன்17 முதல் 19ம் தேதி வரை மத்திய வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் , ஜூன்15 முதல் 19-ம் தேதி வரை, மத்திய அரபிக் கடல், தென்மேற்கு, மத்தியமேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம்.

குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை, ஒரு சில நேரங்களில் கடல் அலை 3.2 முதல் 3.6 மீட்டர் வரை எழக்கூடும். கேரள-கர்நாடக, லட்சத்தீவு கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசுவதால், மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Post navigation

வெளியூர் சென்று திரும்பும் வாகன ஓட்டுநர்கள் குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை: கோவை ஆட்சியர் உத்தரவு
சென்னையில் காணாமல் போன 277 கொரோனா நோயாளிகள்: 90 பேர் போலீஸ் விசாரணையில் சிக்கினர்

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer