சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகாக 6 மாதம் ஒப்பந்த அடிப்படையில் 2000 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி ஆணைகளை வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வழங்கினார்.

கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைக்காக புதிதாக 2 ஆயிரம் செவிலியர்களை நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. அவர்களில் 2ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்க இன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் அம்மாமவின் அரசு கொரோனா நோய் தொற்றுக்கு மேற்கொண்டு வரும் சிகிச்சை முறைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள், 4,893 செவிலியர்கள், 1,508 ஆய்வக நுட்புனர்கள் மற்றும் 2,715 சுகாதார ஆய்வாளர்களை பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டார். இப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் 574 அரசு பணியில் அல்லாத முதுநிலை மருத்துவ மாணவர்கள், 665 மருத்துவர்கள், 365 ஆய்வக நுட்புனர்கள், 1230 பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் சில தினங்களுக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மனிதவள மேம்பாட்டினை வலுப்படுத்தும் விதமாக முதலமைச்சர் உத்தரவிரவிற்கிணங்க சென்னையில் பணிபுரியும் வகையில் மேலும், 2 ஆயிரம் செவிலியர்களை 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக நியமித்து பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டு இச்செவிலியர்கள் உடனடியாக பணியில் சேரத் தொடங்கியுள்ளனர்.

இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.14,000 – ஊதியமாக வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு தங்கும் இடம் மற்றும் உணவு ஆகியவற்றிற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும்.

இம்மனிதவள மேம்பாட்டு பணிகள் மூலம் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கொரோனா தடுப்பு மற்றும் மேலாண்மைப் பணிகள் மேலும் வலுவடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.