சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில்,  மருத்துவக் கல்லூரி ஆடவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில்  42 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதுகலை படித்து வரும் மாணவர்கள் உள்பட இளநிலை மருத்துவம் படித்து இன்டென்ட் செய்யும்  மாணவர்களும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலயில்,  மருத்துவக் கல்லூரி ஆடவர் விடுதியில் முதுகலை மாணவர்கள் பலர் சளி, இருமல், காய்ச்சலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து மொத்தமுள்ள  58 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.