வாஷிங்டன்:

மெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் சிஎன்என் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிபர் டிரம்ப்புக்கு பெரும் பின்னடை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமா ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை எதிரொலி என்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து சிஎன்என் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஜனநாயக கட்சியின் அதிபர் பதவி வேட்பாளர் ஜோ பிடனை விட அவர் 14 சதவீதம் பின் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது.  அங்கு இதுவரை 2லட்சத்துக்கு 26 ஆயிரத்து 597 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில் அங்கு அதிபர் தேர்தலும் சுறுசுறுப்படைந்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார்.

குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும்,  அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் களமிறங்க உள்ளார்.  அங்கு கொரோனா பரவலுக்கு இடையே தேர்தல் பணிகளும் சுறுசுறுப்படைந்து வருகின்றன.

இதற்கிடையில் சமீபத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட்  என்பவர் காவல்துறை யினரால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளது. இந்த விஷயத்தில் ஏராளமானோர் டிரம்ப் அரசுக்கு எதிரான மன நிலையில் உள்ளனர்.
இந்த நேரத்தில்,  அதிபர் தேர்தலில்  யாருக்கு மக்கள் ஆதரவு யாருக்கு  உள்ளது என்பது குறித்து சிஎன்என் நிறுவனம் கருத்துக்கணிப்பை நடத்தியது.   கடந்த 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்புக்கு ஆதரவாக 38 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன்  14 சதவிகிதம் கூடுதல் வக்கு பெற்றுள்ளார். அதாவது52 சதவிகிதம் பெற்றுள்ளார். இதன் காரணமாக வர இருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சிக்கு ஆதரவு பெருகி உள்ளது.
அதுபோல  எஸ்.எஸ்.ஆர்.எஸ் நடத்திய புதிய சி.என்.என் கருத்துக் கணிப்பு, 2020 ஜனாதிபதித் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளரான யு.எஸ். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கான ஒப்புதல் மதிப்பீடு கடந்த மாதத்தில் ஏழு புள்ளிகள்  குறைந்துள்ளது என்பதாக தெரிவித்து உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பங்கேற்றவர்களில் 57 சதவீதம் பேர் ஜார்ஜ் ஃபிலாய்டின் கொலை மற்றும் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பின்னர் நடந்த போராட்டங்களுக்கு மத்தியில் டிரம்பின் ஜனாதிபதி பதவியை ஏற்கவில்லை. இது ஜனவரி 2019 முதல் அவரது மோசமான ஒப்புதல் மதிப்பீடாகும்.

இதற்கிடையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பிடென், டிரம்ப்பை விட 14 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார், இது சிஎன்என் வாக்குப்பதிவில் இன்னும் அதிக மதிப்பெண் பெற்றது.

ஆர்ப்பாட்டங்களை வெள்ளை மாளிகைக்கு வெளியே டிரம்ப் கையாண்ட நேரத்தில் இது சில குடியரசுக் கட்சியினரிடமிருந்து கூட பரவலான விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

சமீபத்திய கறுப்பின மக்களின் எதிர்ப்புகளுக்கு ஜனாதிபதியின் பதில் உதவியாக இருப்பதை விட தீங்கு விளைவிப்பதாக 65 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

அதேபோல் சிபிஎஸ் செய்திநிறுவனக் கருத்துக் கணிப்பில், பதிலளித்தவர்களில் 49% பேர் மினியாபோலிஸில் நிகழ்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஜனாதிபதி டிரம்பி கூறிய பதிலை ஏற்கவில்லை என்பத தெரிய வந்துள்ளது.

32% பேர்  டிரம்புக்கு ஆதரவு அளிப்பதாகவும், 25 பேர் பிடனின் கருத்தை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

மார்னிங் கன்சல்ட்டின் நிறுவனம் வெளியிட்ட தனி கருத்துக் கணிப்பில், பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 45% பேர் டிரம்ப் நிலைமையை நிவர்த்தி செய்யும் விஷயத்தில் மோசமாக கையாண்டதாகவும்,  32% பேர் டிரம்பின்  நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

ஃப்ளாய்டின் மரணத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை டிரம்ப் கையாண்ட விதம் போராட்டத்தை தணிக்க உதவியாக இருப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிப்பதாக இருந்தது என 65 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மார்னிங் கன்சல்ட் வாக்கெடுப்புக்கு வாக்களித்தவர்களில் ஏறத்தாழ 69% பேர் டிரம்ப் ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்ளும் ஒரு மோசமான வேலையைச் செய்வதாகக் கூறினர், அதே நேரத்தில் 14% பேர் மட்டுமே அவர் ஒரு நல்ல, மிகச் சிறந்த அல்லது சிறந்த வேலையைச் செய்வதாகக் கூறினர்.

ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் 2020 தேர்தலுக்கான தாக்கங்களைக் கொண்டுள்ளன என்றும் மார்னிங் கன்சல்ட் கருத்துக் கணிப்பு தெரிவித்து உள்ளது. பதிலளித்தவர்களில் 45% பேர் போராட்டங்களின் விளைவாக பிடனுக்கு வாக்களிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகக்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

31% பேர் டிரம்பிற்கு வாக்களிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினர். 18 சதவிகிதத்தினர் “எந்த வகையிலும் எந்த பாதிப்பும் இல்லை” என்று கூறியுள்ளனர்.

சிஎன்என் கருத்துக்கணிப்பு  குறித்து டிவிட் பதிவிட்டுள்ள டிரம்ப், சிஎன்என் கருத்துக் கணிப்பு முடிவுகள் போலியானவை, கடந்த தேர்தலில் தன்னை விட ஹிலாரி அதிக ஆதரவைப் பெற்றிருந்ததாக அந்நிறுவனம் கூறியிருந்தது, ஆனால் அது  பொய்யாகிப் போனது என்று சுட்டிக்காட்டி  உள்ளார்.